Monday, 21 November 2016

ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!

ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!

ஸ்ரீகாளஹஸ்தி:
சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும் அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள்.

கீழப்பெரும்பள்ளம்:
மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்
தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

திருநாகேஸ்வரம்:
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும் பிறையணிவாணுதலாள் அம்மனையும் இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி தோஷம் நீங்கப் பெறலாம்.

கும்பகோணம்:
நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரும், பெரியநாயகியும் தோஷம் விலக்கி நன்மை அருள்கிறார்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

பாமணி:
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகநாதரும் (சுயம்பு லிங்கம்) அமிர்தநாயகியும் அருள்புரிகிறார்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்றும் இத்தலத்தை அழைப்பர்.

திருப்பாம்புரம்:
கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசிக்க தோஷங்கள் எல்லாம் விலகி ஓடுகின்றன. ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

ஸ்ரீவாஞ்சியம்:
கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.

நாகூர்:
நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம்
இது.

பேரையூர்:
புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.

நயினார்கோவில்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.

நாகமுகுந்தன்குடி:
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது, இந்த ராகு-கேது தோஷ நிவர்த்தித் தலம்.

நாகப்பட்டினம்:
காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர்.

குன்றத்தூர்:
சென்னையை அடுத்து, பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக அருள்பாலிக்கும் நாகேஸ்வரர் சர்ப்ப தோஷங்களை நீக்கி ஆனந்தம் அளிக்கிறார்.

கெருகம்பாக்கம்:
சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் உள்ளது கெருகம்பாக்கம். போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும், பக்தர்களுக்கு தோஷம் விலக்கி அருள்கின்றனர்.
கோடகநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார்; பக்தர் தம் துயர் துடைக்கிறார்.

திருக்களாஞ்சேரி:
மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் நாகநாதர் சுயம்புலிங்கமாக அருள்பரப்பி தோஷ பயம் நீக்குகிறார்.

ஆம்பூர்:
வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி, நாகரத்தின சுவாமி எனும் திருப்பெயர்களோடு இறைவியும், இறைவனும் அருள்பாலிக்கின்றனர்; பக்தர் நலம் காக்கின்றனர்.

பெத்தநாகபுடி:
திருவள்ளூர் மாவட்டம், சோளிங்கருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகவல்லி சமேத நாகநாதேஸ்வரர், தன்னை தரிசிக்கும் பக்தர்களை எல்லாத் துயரிலிருந்தும் விடுவிக்கிறார்.

திருக்கண்ணங்குடி:
திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சுயம்பு லிங்கம். காளத்தீஸ்வரர் என்று திருப்பெயர். நல்வாழ்வளிக்கும் தெய்வம்.

ஊஞ்சலூர்:
ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவராக வீற்றிருந்து, அரவக் குறைகளை அகற்றுகிறார்.

காஞ்சிபுரம்:
பெரிய காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ளது. மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராகு-கேது பூஜித்த தலம் இது.

Monday, 7 November 2016

திருவாலங்காடு

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருவள்ளூர்



சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் திருவாலங்காடு என்ற ஊரில் கோயில் கொண்டுள்ளார் வடாரண்யேஸ்வரர். இங்குள்ள அம்மன் வண்டார்குழனி என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்.
12ம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த கோயில், சிவன் நடனமாடியபோது, அவரது அணிகலன்கள் பூமியின் 5 இடங்களில் விழுந்தன. அவற்றை 1. ரத்ன சபை, 2. கனக சபை, 3. ராஜாத சபை, 4. சித்ர சபை, 5. தாமிர சபைகள் என்று அழைப்பர். அதில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் தலம் முதலாவது ரத்ன சபையாக திகழ்கிறது. இது பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. காரைக்கால் அம்மையார் தனது மூத்த திருப்பதிகத்தை இத்தலத்தில் தான் பாடியுள்ளார்.







திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கோயிலுக்குச் செல்லும் வழி பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டமே இல்லாத பகுதியாகவே இருக்கிறது. அதையும் தாண்டி கோயில் இருக்கும் பகுதியில் தான் சிறிய கிராமம் உள்ளது.
கோயிலின் வாயிலை தாண்டி உள்ளே சென்றால் அங்கு மிகப்பெரிய மண்டபம், திறந்த வெளி, தோட்டம் காணப்படுகிறது. இடது பக்கம் விநாயகர் சன்னதியும், வலது பக்கம் முருகர் சன்னதியும் உள்ளன. அதையடுத்து கோயில் கோபுரம் காட்சியளிக்கிறது. கோயில் கோபுரத்தை கடந்ததும், அங்கும் உள் கோயிலைச் சுற்றி விசாலமான இடம் உள்ளது. வலது பக்கம் வண்டார்குழலி அம்மனும், இடது பக்கத்தில் மண்டபம் போன்ற அமைப்பும் உள்ளது. அதையும் கடந்து உள்ளே செல்லும் போது அதற்குள்ளும் மிக உயரமான தளத்துடன் கூடிய மண்டபம், மற்றும் ஏராளமான இறைவனின் சிலைகள், லிங்கங்கள் காட்சியளிக்கின்றன. அங்குள்ள மண்டபத்தின் தூண்கள் அழகான வேலைபாடுடன் காட்சியளிக்கின்றன.
அங்கு நேரெதிரே வடாரண்யேஸ்வரர் வெள்ளி கிரீடத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார். கருவறை வாயிலில் பால துவாரகர்கள் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். மனதுக்கு அமைதியும், கண்களுக்கு விருந்தாகவும் காட்சி அளிக்கிறார் வடாரண்யேஸ்வரர். அவர்து உருவம் நமது மனக்கண்களில் நீங்காது நிலை பெற்று விடுகிறது. வடாரண்யேஸ்வரரை வணங்கிவிட்டு இடது பக்கமாக கருவறையில் இருந்து வெளியே வந்ததும், சப்தா மாதாக்கள், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், சிவன், பிள்ளையார் என பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு பல சிறப்பு வாய்ந்த சிவலிங்கங்களும் வீற்றிருக்கின்றன.


















இந்த தலத்தின் பின்பக்கம் வலது மூலையில் கோயிலின் தல விருட்சமான மிகப்பெரிய ஆலமரம் வீற்றிருக்கிறது.
மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்றவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல், சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கோயில் நடை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்கு செல்லும் வழி
சென்னை – அரக்கோணம் ரயில் மார்கத்தில் அரக்கோணத்துக்கு முன்பிருக்கும் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கி சுமார் 5 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்துக்கு மிக அருகே ஏராளமான ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. எப்போதாவது வரும் ஒரு பேருந்தை தவிர, ஆட்டோ ஒன்றுதான் கோயிலையும், ரயில் நிலையத்தையும் இணைப்பதற்கான வழி. இது தவிர, சொந்த வாகனத்தில் செல்வோர் தேசிய நெடுஞ்சாலை 205 ல் (சென்னை – ஆவடி – திருவள்ளூர் – ரேணிகுண்டா வழி) சென்றால் இக்கோயிலை அடையலாம்.
பேருந்து மார்கமாக செல்ல வேண்டும் என்றால், தாம்பரம் அல்லது ஆவடியில் இருந்து திருவள்ளூர் சென்று அங்கிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் செல்லலாம். அதே போல அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் சில பேருந்துகள்  திருவாலங்காடு வழியாகவும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலையில் ஒரு அரசுப் பேருந்து ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு வந்து செல்கிறது.



















ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருந்தாலும், புதிதாக கட்டிய கோயிலைப் போன்று கோயில் வளாகம் காட்சி அளிப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
அதில் மாந்தீஸ்வரர் என்ற சிறப்பு வாய்ந்த சிவலிங்கம் இந்த கோயிலில் அமைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அஷ்டாமத்து சனி போன்ற கிரகநிலை இருப்போர், மாந்தீஸ்வரரை வணங்கினால் நலம் பெறலாம் என்று கோயிலில் உள்ள குறிப்பு நமக்கு சொல்கிறது. இந்த திருத்தலம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் உள்ளது. இந்த கோயில் திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்துள்ள கோயிலாகும்.















மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர் திருமேனி - சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது. நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம் எங்குச் செல்கிறதோ? தெரியவில்லை. துவார பாலகர்களைத் தாண்டிச் சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. மூலவருக்கு மேல் உருத்திராக்க விதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துப்பணி உள்ளது.
மூலவரின் பக்கத்தில் போக சக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது. சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன. பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. ஊருக்குப் பக்கத்தில் காளிகோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய 'பழையனூர்' கிராமம், பக்கத்தில் 2 A.e. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இறைவன் - அம்மையப்பர், இறைவி -ஆனந்தவல்லி. மேற்கு நோக்கிய சந்நிதி.
பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத்ந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம்' உள்ளது, திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம் தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போனற் சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் 'சாட்சி பூதேஸ்வரர்' காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.
தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபைத் பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.






திருவாலங்காட்டில் அரக்கர்களை அழித்து அவர்கள் குருதியை குடித்ததால் காளி அசுரர்களின் பண்பு பெற்று தவமியற்றிய முனிவர்களைத் துன்புறுத்துகிறாள். முனிவர்கள் ஈசனைத் துதிக்க, அவர் அகோர வடிவம் கொண்டு காளிமுன் தோன்றுகிறார். காளி ஈசனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள். இருவரும் நடனமாடும் போது சிவன் காதில் அணிந்திருந்த குழை கீழே விழ, ஆட்டத்தை நிறுத்தாமல் குழையைக் காலால் எடுத்துக் காலைக் காதுவரை உயர்த்திப் பொருத்துகிறார். ஒருகால் ஊன்றி மற்றோர் காலைக் காதுவரை தூக்கி ஆடுவது பெண்களுக்கு இயல்பானதல்ல. இதனால் போட்டியில் காளி தோற்கிறாள். காளியின் ஆணவம் அழிய, அழியாக் கடவுள் ஆடலால் வென்ற தலம். ஈசனின் இந்த நடனத்தின் பெயர் ஊர்த்துவதாண்டவம். ஊர்த்துவதாண்டவ ஈசனின் சிற்பங்கள் பல தலங்களில் உள்ளபோதும் இங்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கம்பத்தடி மண்டபத்திலும், தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தின் திரு ஓலக்கா மண்படத்திலும், சிதம்பரம் நடராஜப் பெருமாள் நிருத்த சபை மண்டபத்திலும் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை.

காரைக்கால் அம்மையார்!  இயற்பெயர் புனிதவதியார். திருமணத்திற்குப் பிறகு இவர் கணவர் இவரை தெய்வத்தன்மை பொருந்தியவர் என்று வழிபட்டவுடன் இவர் வாழ விரும்பவில்லை. இறைவனைத் துதிக்கிறார். சிவன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று வினவ, தன் இளமையையும், அழகையும் நீக்கித் தன்க்குப் பேய் வடிவம் தரும்படி இறைஞ்சுகிறார். அவ்வாறே அருள்கிறார் ஈசன். தலையாலேயே நடந்து ஆலங்காட்டை அடைந்தார். சிவபெருமானின் திருக்கூத்தைக் காலமெல்லாம் கண்டு முக்தி அடைந்தார்.

பழையனூர் நீலி!   தேவாரப் பாடல்கள் திருவாலங்காட்டைப் பழையனூருடன் தொடர்புப்படுத்திப் பாடுகின்றன. பழையனூர் என்பது ஊர். திருவாலங்காடு, காடு. இது அன்றைய நிலை. நீலி என்ற பெண் முற்பிறப்பில் தன் கணவனால் வஞ்சித்துக் கொல்லப்படுகிறாள். இந்தப் பிறப்பில் அவனைப் பழிவாங்கும் பொருட்டு திருவாலங்காட்டில் பேயாகத் திரிகிறாள். தரிசனசெட்டி என்ற பெயரில் அவன் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதை இனங்கண்டு தன்னோடு இணையுமாறு அழைக்கிறாள். அவன் பேயென்று இவளை நிராகரிக்கிறான். பழையனூரில் வாழும் வேளாளப் பெருமக்களிடம் சென்று முறையிடுகிறாள். மறுநாள் தீர்ப்பு வழங்குகிறோம்; இன்று ஒன்றாகத் தங்குங்கள் என்கிறார்கள். அதிர்ந்த தரிசனசெட்டி பேயால் தான் கொல்லப்படுவேன் என்று அஞ்சுகிறான். அனைவரும் அவன் உயிருக்கு உத்தரவாதம் அளித்ததால் ஒன்றாகத் தங்குகிறார்கள். நீலி அவனைக் கொன்று பழிதீர்த்துக் கொள்கிறாள். மிகுந்த மனவேதனையுற்ற வேளாளப் பெருமக்கள் 70 பேரும் தீமூட்டி அதில் பாய்ந்து மாய்ந்தனர். திருவாலங்காடு - பழையனூர் செல்லும் வழியில் அவர்கள் தீயில் பாய்ந்த இடத்தில் மண்டபம் உள்ளது.

தலச் சிறப்புகள்::
பஞ்ச சபைகளுள் இது இரத்தின சபை. காரைக்கால் அம்மையாரின் முக்தித் தலம்.

சிவபெருமான் காளி தேவியை நடனத்தால் வென்ற தலம். அருகிலுள்ள காளி கோயிலை தரிசித்த பின்னரே இத்தல இறைவனைத் தரிசிப்பது மரபு.

காரைக்கால் அம்மையாரின் முக்தித் தலமாதலால் இத்தலத்தில் கால் பதிக்க அஞ்சிய சம்பந்தருக்கு தல எல்லையில் சிவபெருமான் காட்சியளித்து அருளியுள்ளார்.

Friday, 7 October 2016

நவராத்திரி

நவராத்திரி கொலு பொம்மையின் தத்துவம்

ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு
சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக்களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து,உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான்.

அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். "ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்...' என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான்.

எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க
வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள்
அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி - ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)

2வது படி - இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)

3வது படி - மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)

4வது படி - நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)

5வது படி - ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)

6வது படி - ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)

7வது படி - மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

8வது படி - தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்

.9வது படி - பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

கொலுபடி தத்துவம் !

கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு,
பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்;

அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்;

மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.
***
சரஸ்வதி வழிபாட்டின் பலன்!

வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள்.
அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய
வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், "சுவாகா' என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும். ***

நங்கையருக்கு நலம் தரும் நவராத்திரி!

உத்தரகோச மங்கை புனித தலம்

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்புலிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான்நடந்தது.6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர்.பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்குஇம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறையதிருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிரமங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியானஅந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்துவெளியிடப்பட்டது.14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயணகாலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்என்று, இத்தலமான்மியமான‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில்இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்தகல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான்என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயேஅம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரசமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆனபந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை.கடல்நீரில் வாழும் மீன்களாகும்.28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலைகட்டிப்போட்டால்அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜைதொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்குசெல்லலாம்.31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி,உத்தரகோச மங்கையில் மரகதகல்நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான்நீங்கியது.34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்குவந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்குசாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போதுஇடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்றசிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும்இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்