Wednesday, 11 October 2017

திருநள்ளாறு

திருநள்ளாறு உருவானதற்கு இப்படி ஒரு கதை இருக்கா? தெரியாம போச்சே!

திருநள்ளாறு பற்றி அறிவோம்....!!

திருநள்ளாறு என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்று கூறுவார்கள். சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு. இந்த கோவில் சுமார் 1900 வருடம் பழமை வாய்ந்தது.

🌿 திருநள்ளாறு என்பதை திரு + நள + ஆறு என்று பிரிக்கலாம். இதில் 'நள" எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. காரைக்காலில் இருந்து சாலை வழியாக எளிதில் திருநள்ளாறை அடைய முடியும். திருச்சி, திருவாரூர் வழியாகவும் காரைக்கால் வந்து, பிறகு திருநள்ளாறை அடையலாம்.

🌿 மூன்று வருடத்திற்கு ஒரு முறை தன் இருப்பிடத்தை (ராசி) மாற்றி கொள்பவர் சனி பகவான். சனி பகவான் வீற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து தான் பல்வேறு ராசிக்காரர்களின் இன்ப துன்ப நிலைகள் கணிக்கப்படுகிறது. அப்படி சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதை சனிப்பெயர்ச்சி என்று கூறுவர். அந்தப் புண்ணிய தினத்தில், பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருநள்ளாறு வந்து பக்தியோடு வழிபட்டுச் செல்கின்றனர்.

🌿 நளச் சக்ரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் தான் திருநள்ளாறு என பெயர் பெற்றது. நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. இவர் சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார்.

🌿 பச்சைப் படிகம் எனும் கீர்த்தனை திருநள்ளாறில் இயற்றப்பட்டதால், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவ்வு+ருக்கு முக்கிய பங்கு உண்டு. திருநள்ளாறு சென்று வழிபடும் அனைவருக்கும், நல்ல பலன்களை அள்ளித் தருவார் சனி பகவான்.

திருநள்ளாறு வரலாறு :

🌟 சைவ சமய பாரம்பரியம் கொண்ட இவ்வு+ர் மக்கள், ஜெயினர்களின் வருகையால் அவர்களின் சமயத்தால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் அந்த நகரத்தை ஆண்ட ராஜாவுக்கு இத்தகைய மாற்றத்தை விரும்பாமல் அதற்கு மாறாக, அந்த நகரத்தின் பாரம்பரிய சமயமான, சைவ சமயத்தை நிறுவ விருப்பம் கொண்டிருந்தார்.

🌟 அப்போது, சைவத் துறவியான திருஞானசம்பந்தரின் சிறப்புகளைப் பற்றி அறிந்த அரசர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசரின் அழைப்பை ஏற்று அரசனைக் காண திருஞானசம்பந்தர் வந்தார்.

🌟 அங்கு வந்த திருஞானசம்பந்தர் அரசருக்கு நீண்ட காலமாக இருந்த உடல் கஷ்டங்களை தன் விசேஷ சக்திகளை கொண்டு குணமாக்கினார். திருஞானசம்பந்தர் அரசரை குணமாக்கிய விஷயம் அந்த நகரம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

🌟 அதுமட்டுமல்லாமல் திருஞானசம்பந்தர், மக்களின் துன்பங்களையும் நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருஞான சம்பந்தரின் புகழ் நகரம் முழுவதும் பரவியது. திருஞானசம்பந்தரால் ஈர்க்கப்பட்ட, மக்கள் அனைவரும் சைவ சமயத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதனைக் கண்ட ஜெயின் சமயத்தினர், சம்பந்தரை போட்டிக்கு அழைத்தனர். அதில் வெற்றி பெற்ற சம்பந்தர், அங்கு மறுபடியும் சைவ சாம்ராஜ்யத்தை நிறுவ பெரும் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக, எழுந்தது தான் திருநள்ளாறு கோவில்.

🌟 இந்த கோவில் சிவ தலமாக இருந்தாலும், சனி பகவானே மிகவும் பிரசித்தி பெற்றவராக உள்ளார். இந்த கோவிலின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, இந்த தலத்திற்கு வந்து வழிபட்டவர்களில், திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலகர்கள், அகத்தியர், அர்ஜூனன், நளன் ஆகியோர்கள் ஆவார்கள். இந்த தலத்தில் இருக்கும் விநாயகபெருமான் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் விளங்குகிறார். திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்....

Monday, 2 October 2017

பரிகாரத் தலங்கள

*பரிகாரத் தலங்கள்*





*ஆயுள் பலம் வேண்டுதல்..*

1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

*ஆரோக்கியத்துடன் வாழ..*

1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.
3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

*எதிரி பயம் நீங்க..*

1.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.அ/மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அ/மிகு. காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அ/மிகு. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.அ/மிகு. தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அ/மிகு. பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அ/மிகு. மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.அ/மிகு. முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அ/மிகு. ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அ/மிகு. வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

*கடன் பிரச்சனைகள் தீர..*

1.அ/மிகு. அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அ/மிகு. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அ/மிகு. சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அ/மிகு. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அ/மிகு. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

*கல்வி வளம் பெருக...*

1.அ/மிகு. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அ/மிகு. தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அ/மிகு. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

*குழந்தைப்பேறு அடைய...*

1.அ/மிகு. ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அ/மிகு. சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அ/மிகு. சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அ/மிகு. பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அ/மிகு. மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அ/மிகு. முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அ/மிகு. நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அ/மிகு. விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

*குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க...*

1.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.அ/மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அ/மிகு. கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அ/மிகு. சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அ/மிகு. நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அ/மிகு. பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.அ/மிகு. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அ/மிகு. மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அ/மிகு. லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அ/மிகு. வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அ/மிகு. ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

*செல்வ வளம் சேர...*

1.அ/மிகு. அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அ/மிகு. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அ/மிகு. பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அ/மிகு. மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

*திருமணத்தடைகள் நீங்க...*

1.அ/மிகு. உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.அ/மிகு. கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அ/மிகு. கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அ/மிகு. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அ/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அ/மிகு. நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

*தீவினைகள் அகன்றிட..*

1.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அ/மிகு. குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அ/மிகு. சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அ/மிகு. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

*நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர...*

1.அ/மிகு. அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அ/மிகு. தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அ/மிகு. பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அ/மிகு. வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

*நோய், நொடிகள் தீர...*

1.அ/மிகு. இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அ/மிகு. தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

*பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண...*

1.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அ/மிகு. பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அ/மிகு. மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

*முன்னோர் வழிபாட்டிற்கு..*

1.அ/மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அ/மிகு. மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அ/மிகு. வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அ/மிகு. ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அ/மிகு. திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அ/மிகு . சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

Wednesday, 6 September 2017

பஞ்சபாத்திரம்

🙏குரு வாழ்க குருவே துணை🙏

குருவின் திருவடி   வணங்கி 

பஞ்ச பத்ர பாத்திரம்'.......

பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன்.....

1.இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.

அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.

அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.

துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி 

ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.

இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'.

இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.

இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.

இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம், 

திருமாலுக்கு உகந்தது துளசி, 

அம்மனுக்கு வேப்பிலை, 

விநாயகருக்கு அருகம் புல், 

பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

2. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்

விளக்கம்

•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்

பயன்பாடு

பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.

அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?

அர்க்கயம் - கைகளுக்கு, பாத்யம் - பாதங்களுக்கு, ஆசமனீயம் - இது ஆசமனம், ஸ்நானீயம் - திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!

இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!

நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!

மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!

தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:

பச்சைக் கர்ப்பூரம்

ஏலக்காய், இலவங்கம்

ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.

3.பஞ்சமுகம்...... இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.

வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.

முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.

அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறோம்

Monday, 4 September 2017

சுருளிமலை

சித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை !

சுருளிமலை மதுரையிலிருந்து தேனி வழியாக 70-கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது .
பதினெட்டுச் சித்தர்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,
தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" யின் தொடர்ச்சிதான் சுருளிமலை.
சுருளி அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் .
இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.
சுருளிமலையை தேவலோக கிரி என்று கூறுவர்.
சித்தர்களும், தவமுனிவர்களும், துர்வாச மகரிஷி- கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகளும் சதுரகிரி மலையில் இறைவனை நோக்கி தவம் புரிய அத்தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான்
தவம் செய்த சித்தர்களுக்கும், ரிசிகளுக்கும் தேவ லோக வாழ்வைக் கொடுத்தருளினார்.
தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ்வோடு "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து சுருளி மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தின் அழகையும் , வனப்பூஞ் சோலைகளையும் சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதையும்
அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதையும் கண்டு ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் சென்றனர்.
அவ்வாறு கைலாயத்திற்கு, செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் எதிர்ப்பட்டு ரிஷிகளை வணங்கி 'சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்' என்று கேட்க அதற்கு ரிஷிகள்
"சதுரகிரி மற்றும் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து விட்டு இப்போது இங்கு வருகின்றோம் " என்றனர்.
இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரை" அழைத்துக் கொண்டு மலையில் தவம் புரிகிறார் .
அவருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருள் புரிகிறார்.
இவ்வாறாக பல சித்தர்களும், தேவாதி தேவர்களும், ரிஷி முனிவர்களும் தவம் செய்து சித்தியும்-முக்தியும் பெற்ற இடமே சுருளிமலையாகும் .
சுருளிமலை பில் சுருளி வேலப்பர் திருக்கோவில் உள்ளது.
அருவிக் கரையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டும், அங்கே குகையின் மீது அமைந்துள்ளது முருகபெருமானின் திருக்கோவில் .
இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது.
இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுவது ஓர் அதிசயம்.
அதே போல இங்கு ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறி உள்ளது.
பல நாட்கள் பாறைகள் மீது நீர் விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது,
வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது இன்னொரு அதிசயம் .
மலையரசனான நம்பிராஜன் வள்ளியை வளர்த்து, முருகப் பெருமானுக்கு மணம் முடித்து தனக்குச் சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தாராம்.
இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன.
விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை என பல குகைகள் உள்ளன.
இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும் இந்த பாறைகள் மீது அமர்ந்து தவம் செய்ய, பாவங்கள் நீங்கி, முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.
இம்மலையில் இன்றும் அனேக சித்தர்கள் வாசம் செய்வதாக கூறுகின்றனர்.
இங்குள்ள கைலாச நாதர் குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.
நிமிர்ந்த நிலையில் உள்ளே செல்ல இயலாது . படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.
இமயகிரி சித்தர் தவம் செய்த போது இறைவன் சிவ பெருமான் குகையின் உள்ளே சென்று அவருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார்.
அதனால் தான் இது “கைலாச நாதர் குகை' என அழைக்க படுகிறது .
கைலாச நாதர் குகை- இமயகிரி சித்தர் குகை இரண்டும் ஒன்றே.
இமயகிரி சித்தர் குகை மிகவும் சிறிய அளவில் உள்ளது .
இதனுள் இருவர் மட்டுமே அமர இடம் இருக்கின்றது. இதனுள் செல்வது யோகாசன பயிற்சி செய்வது போல் இருக்கும்.
இந்த குகையின் உள்ளிருந்து தீர்த்தம் வந்து கொண்டே இருக்கிறது.
ஒரே இருட்டு... உள்ளே அமர்ந்து ஜபம் செய்ய அற்புதமான அனுபவங்களை பெற இயலும் .
இமயகிரி சித்தர் குகைக்கு சற்று மேலே சென்றால் அற்புதமான சற்றே பெரிய குகை உள்ளது .
அதனுள்ளே உள்ள லிங்க சொருபம் மனதை லகிக்க செய்கிறது.
நுழைவாயிலில் எட்டு லிங்கங்களுக்கு நடுவே ஹோம குண்டம் அமைக்க பட்டு இருக்கும்.
மலை அடிவாரத்தில் பூதநாராயண பெருமாள் அருள் புரிகிறார் .
ஆடி அமாவாசை, மற்றும் தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர் பக்தர்கள் .
சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.
மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.

வீட்டில் செல்வங்கள் குவியுமாம்! கண்டிப்பாக செய்யுங்கள்

இந்த இறை வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் செல்வங்கள் குவியுமாம்! கண்டிப்பாக செய்யுங்கள்

துர்க்கை தேவியானவள் நவராத்திரி, விஜயதசமி ஆயுத பூஜை நாட்களில் நடைபெறும் பூஜையின் போது, தேவியின் மலை மகளாக இச்சா சக்தி அனைத்தையும் பெருகிறாள்.

எனவே நாம் இந்த நாட்கள் துர்க்கை அம்மனை மனதில் நினைத்து, அவளை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால், நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அழித்து, நமக்கு ஞான சக்தியை அளித்து, நமக்கு வேண்டிய அனைத்து செல்வங்களையும் கொடுத்து அருளிப்பாள்.

மேலும் நாம் எப்போதும் துர்க்கை தேவியின் ஆசியுடன் இருப்பதற்கு, ஒன்பது நாட்கள் நெய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.

துர்க்கை தேவிக்கு ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய நெய்வேத்தியங்கள்

முதல்நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
இரண்டாம் நாள் நெய்வேத்தியம்: தயிர்ச்சாதம்.
மூன்றாம் நாள் நெய்வேத்தியம்: வெண்பொங்கல்.
நான்காம் நாள் நெய்வேத்தியம்: எலுமிச்சை சாதம்.
ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்: புளியோதரை.
ஆறாம் நாள் நெய்வேத்தியம்: தேங்காய்ச்சாதம்.
ஏழாம் நாள் நெய்வேத்தியம்: கற்கண்டுச் சாதம்.
எட்டாம் நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்: அக்கர வடசல், சுண்டல்
இந்த ஒன்பது விதமான நெய்வேத்தியங்களை தேவிவின் பக்தியுடன் பின்பற்றி வணங்கி வந்தால், நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும்.

விஜயதசமி, நவராத்திரி தினத்தன்று துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தேவிகளையும் பூஜை செய்து வந்தால், நம் நலம் பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

மேலும் விஜயதசமி மற்றும் நவராத்திரி அன்று புதுவேலை, கல்வி, இது போன்ற செயல்களை தொடங்குவதற்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வைத்து பூஜை செய்தால், நாம் தொடங்கும் செயலில் பன்மடங்கு செல்வம் கிடைக்கும்.