Tuesday, 16 May 2017

நம்பி கோயில்

சித்தர்கள் காட்சி தரும் திருநம்பிமலை !!!
(திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குட
ி பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நம்பி கோயில் அமைந்துள்ளது. திருக்குறுங்குட
ியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள இக் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். குறிப்பாக, ஒவ்வொரு தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் இங்கு குடும்பத்துடன் வந்து தங்கியிருந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்திவிட்டுச் செல்கின்றனர். இங்கு ஓடும் நம்பியாறு மிகவும் புனிதமான நதியாகக் கருதப்படுகிறது. கோடையிலும் இங்கு தண்ணீர் வரத்து இருக்கும். இக் கோயிலுக்குச் செல்லும் சாலையானது திருக்குறுங்குட
ியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது .)
ஒய்யாரமாக விளங்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆரம்பமான மலைப்பகுதி. அடர்ந்த காடுகளின் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் குளிர்ச்சியாகக் காட்சி தெரிய-நம்பியாறு-யாரையும் கேட்காமல் மலையுச்சியிலிருந்து தன் இஷ்டத்திற்கேற்ப செடி, கொடி, மலையடிவார மரங்களின் வேர்களை ஆசையோடு தடவிக் கொண்டு கிடைத்த மூலிகைச் சாற்றையும் இழுத்துக் கொண்டு குளுமையாக புன்னகையோடு பவனி வந்து கொண்டிருக்கும் அற்புதக் காட்சியை ஆசைதீரப் பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதமான மலையைப் பெற்ற திருக்குறுங்குடி.
தரைமட்டத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ. கரடு முரடான பாறைக் கற்களை மிதித்துக் கொண்டு மெல்ல மலையேறினால் நம்பிப்பெருமாளின் கோவிலைச் சென்று அடையலாம். கீழ் மட்டத்திலிருந்து நம்பிமலை ஏற குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகலாம்.
மலையில் சாலை போடும் பணி நடந்து கொண்டிருப்பதால் பாதி தூரம் ஜீப் வருகிறது. பிறகு பாதி தூரம் எப்பேர்ப்பட்டவர்களும் காலால் நடந்துதான் போகவேண்டும். மரத்தின் வேர்களும் பாறைக் கற்களும்தான் நமக்கு வழிகாட்டி. இடையிடையில் தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம்.
முகத்தை அலம்பிக் கொள்ள நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக் கொள்ள அங்கங்கே பாறைக்கு நடுவில் ஓடையும் சிற்றருவிகளும் இருப்பதால் தொய்வில்லாமல், களைப்பும் இல்லாமல் செல்லலாம். மிக அடர்த்தியான காடுகள் இங்குமங்கும் இருந்தாலும் காட்டு மிருகங்கள் இருந்தும் அவற்றினால் எந்தவிதத் தொல்லையும் இல்லை.
நம்பி கோவிலில் ஓரளவு வசதியோடு திண்ணை இருக்கிறது. மற்றபடி எந்தவித வசதிகளையும் எதிர்பார்ப்பது கஷ்டம்தான். ஆயிரமாயிரம் குரங்குகள் நம்மைச்சுற்றி இருப்பதால் அந்த மலைக் கோவிலில் பொழுது மிக நன்றாகக் கழியும். கோவிலுக்குப் பக்கத்தில் நம்பியாறு வற்றாமல், பாறை இடுக்கு வழியில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆற்றின் தண்ணீர் சிறிது கூட மாசுபடவில்லை. அதோடு மூலிகைச் செடிகளிடையே தவழ்ந்து வருவதால் மூலிகை மணமும் வீசுகிறது. அந்தத் தண்ணீரை எடுத்து பல நாள்கள் வைத்திருந்தாலும் அந்த நீர் கெடுவதில்லை என்பது அனைவருக்கும் ஓர் ஆச்சரியம்.
நம்பி கோவிலின் கீழே மிகப் பிரம்மாண்டமான புளியமரம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் பல்வேறு சித்தர்கள் இன்றைக்கும் தவம் புரிகிறார்கள். என்றாலும் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அந்தப் புளிய மரத்தின் அடியிலிருந்து சித்தர்கள் வெளியே வருவதும் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பரிபாஷையில் பேசிக் கொள்வதும் இன்றைக்கும் நடக்கிறது என்கிறார் நம்பிமலைக் கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளாகக் குடியிருக்கும் தொண்ணூறு வயதான மனிதச் சித்தர் ஒருவர்.
நம்பிமலைக் கோவிலிலிருந்து இடப்பக்கம் மிகவும் அடர்ந்த காட்டுப்பாதை ஒன்று இருக்கிறது. அங்கு ‘தாய் பாதம்’ என்று ஓரிடம் சென்றால் சித்தர்களின் தரிசனம் நிறையக் கிடைக்கும். அவர்கள் வசிக்கும் குகைகளும் ஆங்காங்கே நிறையக் காணப்படுகின்றன.
இந்த மலைப்பாதையில் துணிந்து செல்ல பெரும்பாலானோர்க்குத் தைரியம் வராது. ஆனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பலர், ஆண்டுக்கொரு முறை இந்த மலைப்பாதை வழியே நான்கு நாள்கள் பயணமாகச் சென்று பொதிகை மலைக்குச் சென்று வருகிறார்கள்.
இந்த மலைக்கோவிலுக்கு வருகிறவர்கள் தங்கள் பாபங்களை ஒழிப்பது ஒருபக்கம் இருந்தாலும், எதிர்காலத்தில் எந்தவிதக் கஷ்டம் இல்லாமல் மன அமைதியோடு வாழலாம் என்ற தன்னம்பிக்கையோட
ு செல்வதைக் காணலாம்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இந்தக் கோவிலுக்கு அக்கம் பக்கத்திலிருந்து நிறையக் கூட்டம் வருகிறது. சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்தக் கோவிலில் யாகம் வளர்த்து பூஜை செய்வதால் அன்று மட்டும் ஆயிரக்கணக்கான பேர் மலையிலேயே தங்கி விடுவார்கள்.
சித்தர்கள் இங்கு புற்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் புற்றீசல் போல் அவ்வப்போது வெளிப்படுவதாகவும் பார்ப்பதற்கு மூன்று அடிக்குமேல் இருக்கமாட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த சித்தர்களைக் காண்பதற்காகப் பல நாள்கள் காத்துக் கிடப்பதுண்டு.
பொதுவாக சித்தர்கள் அத்தனை பேரும் சிவன் கோவிலின் மலைகளிலேதான் உலாவருவதாகச் சொல்வதுண்டு. ஆனால் வைணவக் கோவிலில் சித்தர்கள் இருப்பது பெரும் ஆச்சரியம்தான். அந்த அதிசயம் இந்தக் கோவிலில் தான் தினமும் நடக்கிறது.
ஆரோக்கியமான மலைக்காற்று அமிழ்ந்து நன்றாக குளிக்கும்படியா
ன மூலிகைச் சாற்றோடு விழும் நம்பிமலை நம்பியாறு. சுற்றிலும் பசுமைப் புரட்சிகள். பொழுது போவதற்கு ஆயிரக்கணக்கான குரங்குகளின் சேஷ்டைகள். இந்த அருமையான காட்சிகள், நம் அனைவருக்கும் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை இந்த மலைப் பெருமாளைக் கண்டு ஆனந்தமடைந்து வரலாம்.

Friday, 5 May 2017

ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் :-
மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.
வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.
சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.
அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து
பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து
கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து
ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து
மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து
திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து
புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து
பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து
ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து
மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து
பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து
உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து
அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து
சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து
சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து
விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து
அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து
கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து
மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து
பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
அடுத்து
உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து
திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து
அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து
சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து
பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து
உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து
ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.
மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்

பாபா படேசாகிப் ஜீவ சமாதி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் அருகே உள்ள சின்னபாபா சமுத்திரத்தில் பாபா படேசாகிப் ஜீவ சமாதி உள்ளது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுவை என்ற சிறு நிலப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் சமாதி எழுந்தருளியுள்ளார்கள். அவ்வகையில், சத்தியத்தின் ஒளிக்கதிர்கள் வீசுமிடமாக விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ளது சின்னபாபு சமுத்திரம் கிராமம்.பல ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், மற்றும் பல நாடுகளிலும் ஸ்ரீ வைத்தியநாதனாக மக்களின் பலதரப்பட்ட நோய்களைத் தீர்த்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். மகான் ஓம் ஸ்ரீ படேசாகிப் சித்தர் அமைதியுடையவர், ஆத்மஞானி, ஆத்மஞானியிடம் அமைதி சரணடைகிறது. அமைதியும் ஆனந்தமும் கலந்த சச்சிதானந்தத்தில் வாழ்வதே ஆத்மஞானியின் முடிவு. இறைவன் படைத்தவைகளில் கவனத்தைச் செலுத்தாது இறைவனிடம் கவனம் செலுத்துதலே சிறந்தது.
இறைவனின் பேராற்றலை உணர்ந்த பிறகு சாதி, மதம், இனம் அறவே மறைந்துவிடும். படே என்றால் பெரிய என்று பொருள். உயர்ந்த இத்தகைய நிலையில் இருந்த உத்தமராக விளங்கியதால் இவரை பாபா படே சாயபு என்று அழைத்தனர்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.
இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அற்புத விநாயகர் சிலை அளவில்லா அருளை வாரி வழங்கி வருகிறார். அவ்வூரில் மகான் படேசாகிப் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
பாம்புக்கு மோட்சம் அளித்த மகான் சிவஸ்ரீ பாபா படேசாகிப்:
ஒருநாள் வனத்தாம் பாளையம் சென்று பண்ணகுப்பத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வரப்பில் படுத்துக் கொண்டிருந்த ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக் கண்டு அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் போய்க் கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி, விஷ முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதைக் கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார். மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணகுப்பம் போய்ச் சேர்ந்தார்கள்.
இரவு முழுவதும் மகானை கவனித்துக் கொண்டு உண்ணாமல் உறங்காமல் கவலையோடு இருந்தனர். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது. பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் புதல்வனிடத்தில், ஞான சொரூபமான பெரிய பிள்ளையினிடத்தில் உள்ளாழ்ந்த வலுவான எண்ணத்தைச் செலுத்தினார். இமைகள் மூடிக்கொண்டன. நிஷ்டை நிலைக்கின்றது. ஒன்றும் ஒன்றும் ஒன்றில் ஒன்றாகிவிட்டது. ஒரே ஏகாந்த நிலை கூடுகின்றது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்தெய்துகிறது.
அப்போது அவரைத் தீண்டிய அதே கருநாகம் ஆனந்தமாக கோயிலுக்குள் நுழைந்தது. பக்கத்திலுள்ளவர்கள் அலறியடித்து எழுந்தார்கள். மகான் ஆனந்த அனுபூதியில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் எதுவும் செய்யவில்லை. மகான் அருகில் வந்தது, அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டிய இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சியது. உடனே விநாயக பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவரகளை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின்மேல் ஏறி படம் எடுத்தது. மறுபடியும் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது. ஒருமணிநேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறன்தன. நிஷ்டை கலைந்தது. தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் கருநாகத்தைப் பார்த்தார். அது உடனே அவர் கண்களை நோக்கி தன் உடம்பை சுருட்டி தலையைக் குனிந்து வணங்கியது. பின்னர் அவர் பாதத்தில் அப்படியே குனிந்தபடியே தன் உயிரை விட்டது.
அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்ச பதவியளித்தார். அதன் பூவுடலுக்கு தன் கைகளாலேயே இறுதிச்சடங்குகளும் செய்து முடித்தார். மக்கள் பிரமிப்புடன் இந்த நிகழ்ச்சியை கண்டனர். மரணத்தை வெல்லக்கூடிய சக்தி மகான் அவர் கையிலேயே வைத்திருந்தார் என்பதை புரிந்து கொண்டனர். கொடிய விஷத்தை கொடுத்த கருநாகத்திற்குகூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது.மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாதபடியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணையிட்டு ஆசீர்வதித்தார். மக்களின் மனதில் அந்த ஆத்மஞானி தெய்வம் என்ற நிலையில் வைத்து போற்றப்பட்டார். இன்றளவும் போற்றப்படுகிறார்.
ஒவ்வொரு வாரமும் வருகிற செவ்வாய்கிழமையும், ஒவ்வொரு மாதம் வருகிற ஆயில்ய நட்சத்திரமும் சித்தர் பீடத்தின் முக்கிய விசேஷ நாட்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வருகிற ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர் பீடத்தை மகான் தேரில் பவனி வருகிறார். ஒவ்வொரு வாரம் வருகிற வியாழன், ஞாயிறு விசேஷ நாட்கள் ஆகும். கொடிய தொற்று நோய்கள், தீராத வியாதிகள் போன்றவற்றால் அவதியுறுவோர் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளில் தரிசனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் நீர்மோர், பிஸ்கட், பழவகைகள் தானம் செய்தால் உத்தமமான பலன் கிடைக்கும். வேண்டுதலுடன் வருவோர் 5 செவ்வாய் கிழமை சித்தர் பீடத்தில் இரவு தங்கி சென்றால் உத்தமமான பலன் கிடைக்கும்.
அமைவீடம் : விழுப்புரம் இருந்து கண்டமங்களத்திற்கு பஸ் வசதி உள்ளது புதுவை மாநிலத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் உள்ளது
தொடர்புக்கு:
பூசாரி முருகையன்
செல் : 9443460460.