Tuesday, 9 August 2016

குண்டுமணி

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.

இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.

பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்?

இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.

அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம்.

அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது.

அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது.

ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது.

அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும்.

அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள்.

வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள்.

தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது.

நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.

ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.

ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.

கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது.

ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம்.

அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள்.

பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன.

கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.

ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது.

அனைவரும் " என்ன ஆயிற்று?" என்று பதறினர்.

கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.

கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே
ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து " நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள்.

என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்" என்று அசரீரி கேட்டது.

கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர்.

அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர்.

அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.

அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது.

அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை.

உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த வரலாறு:

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த வரலாறு:

தர்மயுத்தம் முடிந்த பின்னால் விளைந்த நாசத்தால் தர்மர் மன வருத்தம் கொண்டார்....
"தான் ஒருவன் அரியணை ஏறுவதற்காக இத்தனைப் பேர் மாண்டு போயினரே..." என்று.

அப்படிப் பட்ட சமயத்திலே மன ஆறுதல் வேண்டி,  ஸ்ரீகிருஷ்ணரைக் காண சென்றார்.

பரமாத்மாவான பார்த்தசாரதியோ அப்பொழுது தவத்தில் இருந்தார்.

ஆச்சரியப்பட்டுப் போன யுதிஷ்டிரர், "நீயே பரம்பொருள், பரப்பிரம்ஹம், உயிர்கள் அனைத்தும் உன்னைக் குறித்து தவம் செய்கையில், நீ யாரைக் குறித்து தவம் செய்கிறாய்?" என்று வினவுகிறார்.

(குறிப்பு: யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரை விட வயதில் மூத்தவராதலால் ஒருமையில் பேசுவதில் ஆச்சரியமில்லை).

ஸ்ரீகிருஷ்ணர் பதில் உரைக்கிறார், "என்னுடைய மனமானது கங்கையின் மைந்தரான பீஷ்மரிடத்தே உள்ளது, வா அவரிடம் சென்று ஞான உபதேசம் பெறலாம்".

"ஞான உபதேசம் அளிக்க இறைவனான நீயே உடன் இருக்கும் போது ஏன் பீஷ்மரிடத்தே சென்று கேட்க வேண்டும்?"

"பீஷ்மர் ஞானத்தின் பிறப்பிடம். உலகில் அவரைப் போல ஞானம் பெற்றவர் இல்லை. அவர் பூமியை விட்டுப் பிரியும் பொழுது ஞானமே பூமியை விட்டுப் பிரிகிறது என்று அறிந்துகொள்".

ஸ்ரீகிருஷ்ணர், யுதிஷ்டிரர், அர்ஜுனாதிகள், பாஞ்சாலி, ஸ்ரீவைஷம்பாயனர் என்று அனைவரும் தர்மக்ஷேத்திரக் களத்தில் கூடுகின்றனர்.

சரதல்பத்தில் உத்ராயண புண்யகாலத்திற்குக் காத்திருக்கும் பிதாமகர் பீஷ்மரைச் சந்திக்கின்றனர்.

அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தம் யோக நிஷ்டையால் பீஷ்மரின் உடல் ஹிம்சையை அறிந்து கொண்டு புத்துயிர் அளித்து புதிய இரத்தம் பாய்ச்சுகிறார் பீஷ்மருக்கு.

ஸ்ரீ வைஸம்பாயந உவாச:
"ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ:
யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத"

ஸ்ரீவைஷம்பாயனர் கூறுகிறார், "தர்மம் குறித்து தான் கற்றறிந்த முறைகள், பாவத்தைப் போக்கும் வழிகள் எவற்றிலும் திருப்தி அடையாத யுதிஷ்டிரன் மீண்டும் ஞானம் பெற வருகை தந்துள்ளான், பீஷ்மர் எனும் நித்யமாய் அன்பு இருக்கும் இடத்தில்".

பின் யுதிஷ்டிரர் ஆறு கேள்விகள் பீஷ்மரிடம் கேட்கிறார்,

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்

1. கிமேகம் தைவதம் லோகே?
அகிலத்தில் மிகப் பெரும் தெய்வம் யார்?

2. கிம் வாப்யேகம் பராயணம்?
அனைவருக்கும் அடைக்கலம் யார்?

3. ஸ்துவந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்?
யாரைத் புகழ்பாடுவதன் மூலம் உன்னத நிலையை அடையலாம்?

4. கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்?
யாரைத் துதிப்பதன் மூலம் உன்னத நிலையை அடையலாம்?

5. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:?
எது மிக உயர்வான தர்மம் என்று தாம் கருதுகிறீர்கள்?

6. கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்?
எவரைக் குறித்து ஜபம் செய்வதால் சம்சாரக் கடலில் இருந்து விடுபடலாம்?

இதற்கு பீஷ்மரின் பதில்கள்:

1. ஜகத்திலே மிகப் பெரியவரான புருஷோத்தமனான அனந்தன் (ஸ்ரீவிஷ்ணு).

2. ஒளி பொருந்திய, அனைவரின் புகலிடமான, சர்வ வல்லமை பொருந்திய உண்மைத் தத்துவமானவர் - ஸ்ரீவிஷ்ணு.

3, 4: தேவர்களுக்கெல்லாம் தெய்வமான பரம்பொருளைத் துதிப்பதன் மூலம்.

5, 6: ஆதியும் அந்தமும் இல்லாத புருஷோத்தமனின் நாமங்களைப் பாடுவதன் மூலம் ஒருவர் சம்சாரக் கடலைத் துறந்து உன்னதமான நிலையை அடையலாம்.

இவ்வாறு பதில் அளித்த பீஷ்மர் ஸ்ரீவிஷ்ணுவின் ஆயிரத்தெட்டு நாமங்களை யுதிஷ்டிரருக்கு உபதேசிக்கிறார்.

விஷ்வம் என்று தொடங்கி சர்வப் ப்ரகரனாயுதன் என்று நிறைவுறும் 1008 நாமங்கள் அவை.

பார்வதி தேவி பரமேஷ்வரனிடம் கேட்கிறார்:

கேநோ பாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோ

ஈஸ்வர உவாச - ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே

அதாவது ஸ்ரீவிஷ்ணுவின் இந்த 1008 திருநாமங்களைக் கூற இயலாதவர்களுக்கு எளிதான வழியைக் கூறுங்கள்.

பரமசிவனார் பதில் உரைக்கிறார்,

"ராம ராம ராம"

இவ்வாறு ராம நாமத்தை ஜபம் செய்வது ஆயிரம் நாமங்களையும் ஜபம் செய்ததற்கு இணையாகும்.

சிறப்பு: இவ்வுபதேசம், பகவானே அருகில் அமர்ந்து கேட்ட சிறப்பு உடையது.

வேப்பிலை கட்டி சித்தா்.* 🍁


🍁 *வேப்பிலை கட்டி சித்தா்.* 🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சதாசிவ பிரம்மேந்திரா் போல் முதலில் அவதூதராக ( பிறந்த மேனியராக) முற்றும் துறந்த மகாஞானியராய் திருஅண்ணாமலையில் கிாிவலம் வருவதையே பெரும் தவமாகக் பூண்ட பெயாில்லாப் பெரும் சித்தா்,பிரானே காலவா்த்தமான சூழ்நிலைகளுக்கேற்ப வேப்பிலைக் கட்டி சித்தா் என்னும் பெயரைப் பெற்றிருந்தாா்.

ஒரு முறை குறுநில மன்னன் ஒருவா் தம் ராணி குடும்பம் மற்றும் பாிவாரங்களோடு திருவண்ணாமலைக்குப் பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது, இவாிடம் வந்த சிலா், ராணி தம் தோழியருடன், மன்னன் ஒருசேர  பல்லக்கில் வருவதால் தாங்கள் அவதூதராக அவா்முன் சென்றால் மன்னா் கோபங் கொண்டு வாளால் வெட்டிக் கொன்று விடுவாா் என்று எச்சாித்தனா்.

ஆனால் அந்த சித்தா் பெருமானோ ஸ்தித பிரக்ஞராய் சிவசிந்தனையில் லயித்தவராய் அவா் பாட்டிற்குத் தன் வழியே போய்க் கொண்டிருந்தாா். இடையில் வழி பாட்டிற்கென ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலுக்கு வந்தாா். ஆலய சன்னதியை வலம் வந்து வெளியே வருகையில் சித்தா்பிரானின் இடையில்......

.......திடீரென்று ஜோதிப்பிரகாசம் நிறைந்த வேப்பிலை ஆடை ஒன்று காட்சியளித்தது.

ஆம்!... அம்பிகை தன் பக்தனுக்கு அளித்த வேப்பிலை ஆடை அது!" அதமுதலேருந்துதான் வேப்பிலை ஆடை கட்டி வரும் பிராா்த்தனை நடை முறைக்கு வந்தது.

புடைசூழ குடும்பப் பாிவாரங்களுடன் பவனி வந்து கொண்டிருந்த மன்னன் தான் பிறமதத்தினனாக இருந்தாலும் வேப்பிலை ஆடையுடன் ஒளிப்பிரகாசம் பூண்டவராய்ச் செல்லும் சித்தரைக் கண்டு வியந்து பணிந்தாா்.  மற்ற அனைவரும் குதிரைகள் மற்றும் பல்லக்கில் இருந்து இறங்கி அவரை வணங்கினா்.

ஆனால் சித்தரோ நடப்பது ஏதும் அறியாதவராய் உலகப் பற்றின்றி ஞானப் பிரகாசமாய் தன் வழி நடந்தாா். அதுமுதலே வேப்பிலை கட்டிச் சித்தா் எனப் பெயா் பெற்றாா்.

அது அம்பிகை அளித்த வேப்பிலை ஆடையாதலால் அவா் ஜவாலயம் பூணும் வரை அதே பசுமையுடன், ஒரு வேப்பிலை கூட உதிராமல் அந்த வேப்பிலையாடை, ஜோதிப்மிரகாசமாக பசுமையுடன் பாிமளித்தது.

எங்கேனும் வேப்ப மரதிதைக் கண்டீல் அதனைப் பாிவுடன் ஸ்பாிசித்து மஞ்சள் பூசி வழிபட்டு ஆதன்கீழ் அமா்ந்து தியானிப்பாா்.

இன்று திருஅண்ணாமலை கிாிவலப்பாதை எங்கினும் நாம் காண்கின்ற இல்லங்கள், தோட்டங்கள், நந்தவனங்கள் எங்கும் காண்கின்ற பசுமையான வேப்பமரங்கள் அனைத்தும் சித்தாின் திருக்கரங்கள் பட்டவையே!"

இவா் ஸ்ரீ பச்சையம்மனை  இஷ்ட தெய்வமாகப் பூசித்து அம்பிகையுடன் தாிசனமும் கண்டு அப்பராசக்தியின் பேரருளையும் பெற்றவா்.

இவாிடம்,பிரசாதமாக பெறப்பட்ட வேப்பங்கன்றுகள் தாம் இன்று பல திருக்கோயில்களிலும், தோட்டங்களிலும்,  நந்தவனங்களிலும் பலநூற்றாண்டுகளைக் கடந்த வேப்பமரங்களாகக் காணப்படுகின்றன. அண்ணாமலையில் தோன்றியது முதல் ஜீவசமாதி அடையும் வரை இந்த அருணாசல இடத்தை விட்டு ஒரு நிமிடமும் அகலாதவா் இந்த சித்தா்.

நோய் நிவாரணங்களுக்காக அவாின் ஆசியை வேண்டுவோா் அவா் சுட்டிக்காட்டும் வேப்பமரத்தைச் சுற்றி விட்டு கிாிவலம் வந்தால் போதும், நோய் முற்றிலும் தூரொழிந்து போய்விடும்.

இங்கே கிாிவலம் வருவோா் நிறைய மஞ்சளை அரைத்து எடுத்து வந்து வழியில் கண்ணில் படுகின்ற வேப்பமரங்களுக்கு

*"வேப்பிலைக் கட்டிச் சித்தா*
*காப்பிலைக் கட்டித்தா"*
*ரட்சைமந்திரங்கள் உபதேசித்து அருள்க"*

என்று ஓதி மஞ்சள்பூசி வழிபடுவது நல்லது.

மேற்கண்ட சித்த வைத்திய சூக்த மந்திரத்தை ஓதியவாறு தேய்பிறையில் வரும் செவ்வாய், அஸ்வினி, ஆயில்ய நட்சத்திர நாட்களில் திருஅண்ணாமலையை கிாிவலம்  வந்து வேப்பமரங்களுக்கு மஞ்சள் பூசி வழிபட்டு வந்தால் கா்ப்பம் நழுவுதல், கா்ப்பாயசக் கோளாறுகள், கா்ப்பம் தாிக்க இயலாமை போன்றவற்றுக்கு நிவா்த்தி கிடைக்கிறதாம்.

வயிற்றுவலி, பிரசவ வலி, மற்றும் பிரசவவேதனைகளில் அவதியுறும் நிலையில் உள்ள பெண்களும், கடுமையான ஜுரத்தால் அவதியுறும் குழந்தைகளும் பொியோா்களும், திருவண்ணாமலை ஸ்ரீ பச்சையம்மனுக்கு வேண்டி,,,,

*"வேப்பிலைக் கட்டிச் சித்தா*
*காப்பிலைக் கட்டித்தா"*

என்கின்ற பீஜாட்சரச் சித்த வேத வாக்கியத்தை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செபித்து வரும்போது நோய் நீங்கிப்போய் குணமாகி விடுகிறது.

          திருச்சிற்றம்பலம்.
*திருஅண்ணாமலையாாின் ஒளி, நாளையும் ஒளிவீசித் தொடரும்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியாா்கள் கூட்டம் பெருகிட, அடியாா் தொண்டு செய்யுங்கள்.*
                திருச்சிற்றம்பலம்!
                திருச்சிற்றம்பலம்!!
                திருச்சிற்றம்பலம்!!!