🍁 *வேப்பிலை கட்டி சித்தா்.* 🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சதாசிவ பிரம்மேந்திரா் போல் முதலில் அவதூதராக ( பிறந்த மேனியராக) முற்றும் துறந்த மகாஞானியராய் திருஅண்ணாமலையில் கிாிவலம் வருவதையே பெரும் தவமாகக் பூண்ட பெயாில்லாப் பெரும் சித்தா்,பிரானே காலவா்த்தமான சூழ்நிலைகளுக்கேற்ப வேப்பிலைக் கட்டி சித்தா் என்னும் பெயரைப் பெற்றிருந்தாா்.
ஒரு முறை குறுநில மன்னன் ஒருவா் தம் ராணி குடும்பம் மற்றும் பாிவாரங்களோடு திருவண்ணாமலைக்குப் பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது, இவாிடம் வந்த சிலா், ராணி தம் தோழியருடன், மன்னன் ஒருசேர பல்லக்கில் வருவதால் தாங்கள் அவதூதராக அவா்முன் சென்றால் மன்னா் கோபங் கொண்டு வாளால் வெட்டிக் கொன்று விடுவாா் என்று எச்சாித்தனா்.
ஆனால் அந்த சித்தா் பெருமானோ ஸ்தித பிரக்ஞராய் சிவசிந்தனையில் லயித்தவராய் அவா் பாட்டிற்குத் தன் வழியே போய்க் கொண்டிருந்தாா். இடையில் வழி பாட்டிற்கென ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலுக்கு வந்தாா். ஆலய சன்னதியை வலம் வந்து வெளியே வருகையில் சித்தா்பிரானின் இடையில்......
.......திடீரென்று ஜோதிப்பிரகாசம் நிறைந்த வேப்பிலை ஆடை ஒன்று காட்சியளித்தது.
ஆம்!... அம்பிகை தன் பக்தனுக்கு அளித்த வேப்பிலை ஆடை அது!" அதமுதலேருந்துதான் வேப்பிலை ஆடை கட்டி வரும் பிராா்த்தனை நடை முறைக்கு வந்தது.
புடைசூழ குடும்பப் பாிவாரங்களுடன் பவனி வந்து கொண்டிருந்த மன்னன் தான் பிறமதத்தினனாக இருந்தாலும் வேப்பிலை ஆடையுடன் ஒளிப்பிரகாசம் பூண்டவராய்ச் செல்லும் சித்தரைக் கண்டு வியந்து பணிந்தாா். மற்ற அனைவரும் குதிரைகள் மற்றும் பல்லக்கில் இருந்து இறங்கி அவரை வணங்கினா்.
ஆனால் சித்தரோ நடப்பது ஏதும் அறியாதவராய் உலகப் பற்றின்றி ஞானப் பிரகாசமாய் தன் வழி நடந்தாா். அதுமுதலே வேப்பிலை கட்டிச் சித்தா் எனப் பெயா் பெற்றாா்.
அது அம்பிகை அளித்த வேப்பிலை ஆடையாதலால் அவா் ஜவாலயம் பூணும் வரை அதே பசுமையுடன், ஒரு வேப்பிலை கூட உதிராமல் அந்த வேப்பிலையாடை, ஜோதிப்மிரகாசமாக பசுமையுடன் பாிமளித்தது.
எங்கேனும் வேப்ப மரதிதைக் கண்டீல் அதனைப் பாிவுடன் ஸ்பாிசித்து மஞ்சள் பூசி வழிபட்டு ஆதன்கீழ் அமா்ந்து தியானிப்பாா்.
இன்று திருஅண்ணாமலை கிாிவலப்பாதை எங்கினும் நாம் காண்கின்ற இல்லங்கள், தோட்டங்கள், நந்தவனங்கள் எங்கும் காண்கின்ற பசுமையான வேப்பமரங்கள் அனைத்தும் சித்தாின் திருக்கரங்கள் பட்டவையே!"
இவா் ஸ்ரீ பச்சையம்மனை இஷ்ட தெய்வமாகப் பூசித்து அம்பிகையுடன் தாிசனமும் கண்டு அப்பராசக்தியின் பேரருளையும் பெற்றவா்.
இவாிடம்,பிரசாதமாக பெறப்பட்ட வேப்பங்கன்றுகள் தாம் இன்று பல திருக்கோயில்களிலும், தோட்டங்களிலும், நந்தவனங்களிலும் பலநூற்றாண்டுகளைக் கடந்த வேப்பமரங்களாகக் காணப்படுகின்றன. அண்ணாமலையில் தோன்றியது முதல் ஜீவசமாதி அடையும் வரை இந்த அருணாசல இடத்தை விட்டு ஒரு நிமிடமும் அகலாதவா் இந்த சித்தா்.
நோய் நிவாரணங்களுக்காக அவாின் ஆசியை வேண்டுவோா் அவா் சுட்டிக்காட்டும் வேப்பமரத்தைச் சுற்றி விட்டு கிாிவலம் வந்தால் போதும், நோய் முற்றிலும் தூரொழிந்து போய்விடும்.
இங்கே கிாிவலம் வருவோா் நிறைய மஞ்சளை அரைத்து எடுத்து வந்து வழியில் கண்ணில் படுகின்ற வேப்பமரங்களுக்கு
*"வேப்பிலைக் கட்டிச் சித்தா*
*காப்பிலைக் கட்டித்தா"*
*ரட்சைமந்திரங்கள் உபதேசித்து அருள்க"*
என்று ஓதி மஞ்சள்பூசி வழிபடுவது நல்லது.
மேற்கண்ட சித்த வைத்திய சூக்த மந்திரத்தை ஓதியவாறு தேய்பிறையில் வரும் செவ்வாய், அஸ்வினி, ஆயில்ய நட்சத்திர நாட்களில் திருஅண்ணாமலையை கிாிவலம் வந்து வேப்பமரங்களுக்கு மஞ்சள் பூசி வழிபட்டு வந்தால் கா்ப்பம் நழுவுதல், கா்ப்பாயசக் கோளாறுகள், கா்ப்பம் தாிக்க இயலாமை போன்றவற்றுக்கு நிவா்த்தி கிடைக்கிறதாம்.
வயிற்றுவலி, பிரசவ வலி, மற்றும் பிரசவவேதனைகளில் அவதியுறும் நிலையில் உள்ள பெண்களும், கடுமையான ஜுரத்தால் அவதியுறும் குழந்தைகளும் பொியோா்களும், திருவண்ணாமலை ஸ்ரீ பச்சையம்மனுக்கு வேண்டி,,,,
*"வேப்பிலைக் கட்டிச் சித்தா*
*காப்பிலைக் கட்டித்தா"*
என்கின்ற பீஜாட்சரச் சித்த வேத வாக்கியத்தை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செபித்து வரும்போது நோய் நீங்கிப்போய் குணமாகி விடுகிறது.
திருச்சிற்றம்பலம்.
*திருஅண்ணாமலையாாின் ஒளி, நாளையும் ஒளிவீசித் தொடரும்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியாா்கள் கூட்டம் பெருகிட, அடியாா் தொண்டு செய்யுங்கள்.*
திருச்சிற்றம்பலம்!
திருச்சிற்றம்பலம்!!
திருச்சிற்றம்பலம்!!!
No comments:
Post a Comment