Wednesday, 6 September 2017

பஞ்சபாத்திரம்

🙏குரு வாழ்க குருவே துணை🙏

குருவின் திருவடி   வணங்கி 

பஞ்ச பத்ர பாத்திரம்'.......

பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன்.....

1.இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.

அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.

அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.

துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி 

ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.

இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'.

இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.

இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.

இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம், 

திருமாலுக்கு உகந்தது துளசி, 

அம்மனுக்கு வேப்பிலை, 

விநாயகருக்கு அருகம் புல், 

பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

2. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்

விளக்கம்

•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்

பயன்பாடு

பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.

அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?

அர்க்கயம் - கைகளுக்கு, பாத்யம் - பாதங்களுக்கு, ஆசமனீயம் - இது ஆசமனம், ஸ்நானீயம் - திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!

இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!

நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!

மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!

தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:

பச்சைக் கர்ப்பூரம்

ஏலக்காய், இலவங்கம்

ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.

3.பஞ்சமுகம்...... இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.

வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.

முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.

அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறோம்

Monday, 4 September 2017

சுருளிமலை

சித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை !

சுருளிமலை மதுரையிலிருந்து தேனி வழியாக 70-கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது .
பதினெட்டுச் சித்தர்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,
தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" யின் தொடர்ச்சிதான் சுருளிமலை.
சுருளி அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் .
இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.
சுருளிமலையை தேவலோக கிரி என்று கூறுவர்.
சித்தர்களும், தவமுனிவர்களும், துர்வாச மகரிஷி- கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகளும் சதுரகிரி மலையில் இறைவனை நோக்கி தவம் புரிய அத்தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான்
தவம் செய்த சித்தர்களுக்கும், ரிசிகளுக்கும் தேவ லோக வாழ்வைக் கொடுத்தருளினார்.
தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ்வோடு "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து சுருளி மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தின் அழகையும் , வனப்பூஞ் சோலைகளையும் சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதையும்
அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதையும் கண்டு ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் சென்றனர்.
அவ்வாறு கைலாயத்திற்கு, செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் எதிர்ப்பட்டு ரிஷிகளை வணங்கி 'சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்' என்று கேட்க அதற்கு ரிஷிகள்
"சதுரகிரி மற்றும் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து விட்டு இப்போது இங்கு வருகின்றோம் " என்றனர்.
இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரை" அழைத்துக் கொண்டு மலையில் தவம் புரிகிறார் .
அவருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருள் புரிகிறார்.
இவ்வாறாக பல சித்தர்களும், தேவாதி தேவர்களும், ரிஷி முனிவர்களும் தவம் செய்து சித்தியும்-முக்தியும் பெற்ற இடமே சுருளிமலையாகும் .
சுருளிமலை பில் சுருளி வேலப்பர் திருக்கோவில் உள்ளது.
அருவிக் கரையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டும், அங்கே குகையின் மீது அமைந்துள்ளது முருகபெருமானின் திருக்கோவில் .
இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது.
இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுவது ஓர் அதிசயம்.
அதே போல இங்கு ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறி உள்ளது.
பல நாட்கள் பாறைகள் மீது நீர் விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது,
வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது இன்னொரு அதிசயம் .
மலையரசனான நம்பிராஜன் வள்ளியை வளர்த்து, முருகப் பெருமானுக்கு மணம் முடித்து தனக்குச் சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தாராம்.
இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன.
விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை என பல குகைகள் உள்ளன.
இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும் இந்த பாறைகள் மீது அமர்ந்து தவம் செய்ய, பாவங்கள் நீங்கி, முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.
இம்மலையில் இன்றும் அனேக சித்தர்கள் வாசம் செய்வதாக கூறுகின்றனர்.
இங்குள்ள கைலாச நாதர் குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.
நிமிர்ந்த நிலையில் உள்ளே செல்ல இயலாது . படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.
இமயகிரி சித்தர் தவம் செய்த போது இறைவன் சிவ பெருமான் குகையின் உள்ளே சென்று அவருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார்.
அதனால் தான் இது “கைலாச நாதர் குகை' என அழைக்க படுகிறது .
கைலாச நாதர் குகை- இமயகிரி சித்தர் குகை இரண்டும் ஒன்றே.
இமயகிரி சித்தர் குகை மிகவும் சிறிய அளவில் உள்ளது .
இதனுள் இருவர் மட்டுமே அமர இடம் இருக்கின்றது. இதனுள் செல்வது யோகாசன பயிற்சி செய்வது போல் இருக்கும்.
இந்த குகையின் உள்ளிருந்து தீர்த்தம் வந்து கொண்டே இருக்கிறது.
ஒரே இருட்டு... உள்ளே அமர்ந்து ஜபம் செய்ய அற்புதமான அனுபவங்களை பெற இயலும் .
இமயகிரி சித்தர் குகைக்கு சற்று மேலே சென்றால் அற்புதமான சற்றே பெரிய குகை உள்ளது .
அதனுள்ளே உள்ள லிங்க சொருபம் மனதை லகிக்க செய்கிறது.
நுழைவாயிலில் எட்டு லிங்கங்களுக்கு நடுவே ஹோம குண்டம் அமைக்க பட்டு இருக்கும்.
மலை அடிவாரத்தில் பூதநாராயண பெருமாள் அருள் புரிகிறார் .
ஆடி அமாவாசை, மற்றும் தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர் பக்தர்கள் .
சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.
மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.

வீட்டில் செல்வங்கள் குவியுமாம்! கண்டிப்பாக செய்யுங்கள்

இந்த இறை வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் செல்வங்கள் குவியுமாம்! கண்டிப்பாக செய்யுங்கள்

துர்க்கை தேவியானவள் நவராத்திரி, விஜயதசமி ஆயுத பூஜை நாட்களில் நடைபெறும் பூஜையின் போது, தேவியின் மலை மகளாக இச்சா சக்தி அனைத்தையும் பெருகிறாள்.

எனவே நாம் இந்த நாட்கள் துர்க்கை அம்மனை மனதில் நினைத்து, அவளை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால், நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அழித்து, நமக்கு ஞான சக்தியை அளித்து, நமக்கு வேண்டிய அனைத்து செல்வங்களையும் கொடுத்து அருளிப்பாள்.

மேலும் நாம் எப்போதும் துர்க்கை தேவியின் ஆசியுடன் இருப்பதற்கு, ஒன்பது நாட்கள் நெய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.

துர்க்கை தேவிக்கு ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய நெய்வேத்தியங்கள்

முதல்நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
இரண்டாம் நாள் நெய்வேத்தியம்: தயிர்ச்சாதம்.
மூன்றாம் நாள் நெய்வேத்தியம்: வெண்பொங்கல்.
நான்காம் நாள் நெய்வேத்தியம்: எலுமிச்சை சாதம்.
ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்: புளியோதரை.
ஆறாம் நாள் நெய்வேத்தியம்: தேங்காய்ச்சாதம்.
ஏழாம் நாள் நெய்வேத்தியம்: கற்கண்டுச் சாதம்.
எட்டாம் நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்: அக்கர வடசல், சுண்டல்
இந்த ஒன்பது விதமான நெய்வேத்தியங்களை தேவிவின் பக்தியுடன் பின்பற்றி வணங்கி வந்தால், நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும்.

விஜயதசமி, நவராத்திரி தினத்தன்று துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தேவிகளையும் பூஜை செய்து வந்தால், நம் நலம் பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

மேலும் விஜயதசமி மற்றும் நவராத்திரி அன்று புதுவேலை, கல்வி, இது போன்ற செயல்களை தொடங்குவதற்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வைத்து பூஜை செய்தால், நாம் தொடங்கும் செயலில் பன்மடங்கு செல்வம் கிடைக்கும்.

நினைத்த காரியம் நடக்க

நினைத்த காரியம் நடக்க இந்த அபிஷேகம் செய்யுங்கள்

நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாட்டினை நடத்துவோம்.

ஒவ்வொரு அபிஷேக வழிபாட்டிற்கும் சிறப்பு பலன்கள் உள்ளது. அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப அபிஷேகம் செய்து பலனை பெறலாம்.

இறைவனுக்கு வலம்புரி சங்கினால் நாம் அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
தங்கத்தில் அபிஷேகம் செய்தால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெருகும்.
பன்னீர் மற்றும் சந்தனம் கலந்து அபிஷேகம் செய்தால் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
விபூதி அபிஷேகம் போகத்தினையும் மோட்சத்தினையும் வழங்கும்.
சந்தன தைல அபிஷேகம் இல்லத்தில் சுகத்தையும், சுபிட்சத்தினையும் வழங்கும்.
திருமஞ்சன பொடியினால் அபிஷேகம் செய்ய கடன் மற்றும் நோய் தீரும்.
கரும்பு சாறினால் அபிஷேகம் செய்தால் நோய்கள் தீரும். எலுமிச்சை சாறு அபிஷேகம் பகையை அழிக்கும்.
இன்பமான வாழ்வினை பெறுவதற்கு இளநீர் அபிஷேகம் செய்தல் வேண்டும்.
பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் உடலும் உள்ளமும் வலிமை பெறும்.
குரல் இனிமை பெறுவதற்கு தேனால் அபிஷேகம் செய்யவேண்டும்.
நெய் அபிஷேகம் முக்தியினை தரும். நல்ல குழந்தைகளை பெற தயிர் அபிஷேகம் செய்யலாம்.
பாலாபிஷேகம் பிணிகளை நீக்கி, நீண்ட ஆயுளை வழங்கும்.

திசை பார்த்து எழுந்திருங்கள்!

காலையில் திசை  பார்த்து எழுந்திருங்கள்!

கிழக்கு முகம்பார்த்தால் ஆயுள் விருத்தி.

தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம்.

தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகும்.

தென்மேற்கு மூலை பார்த்தால், பாவங்கள் சேரும்.

மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.

வடமேற்கை பார்த்தால், புஷ்டியுண்டாகும்.

வடகிழக்கு மூலையை பார்த்தால், உடலிலும் – உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும்.

இவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் இன்னல்கள் மறையும், இறைவனின் ஆசியால் நன்மைகள் நம்மை தேடி வரும்

வடக்கில் தலைவைத்து படுக்கக்கூடாது: பயனுள்ள அறிவுரைகள்
சாஸ்திரங்களில் நாம் என்ன செய்தால் செல்வமும் கல்வியின் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நாம் செய்யக்கூடாதவைகளும் அறிவுரையாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் சில

குரு,ஜோதிடர்,கோவில்,சகோதரி,வைத்தியர் இவர்களை பார்க்க செல்லும்போது வெறும் கையுடன் செல்லக்கூடாது.
தலையையோ உடலையோ இரு கையாலும் சொறியக்கூடாது. வலது கையினால் மட்டுமே சொறிய வேண்டும்.
இரு கையாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது. வலது கையினால் மட்டுமே தேய்க்க வேண்டும்.
வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது. ஒரு காலை மற்றொரு காலால் தேய்த்து கழுவக்கூடாது.
பேசும் போது துரும்பை கிள்ளி போடக்கூடாது. ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.
தலைவாசலுக்கு நேரே தரையிலோ, கட்டில் போட்டோ படுக்கக்கூடாது. வீட்டிற்குள் வரும் போது தலைவாசல் வழியாக தான் வரவேண்டும்.
வடக்கிலும், கோணத்திசைக்களிலும் தலை வைத்து படுக்கக்கூடாது. நடக்கும் போது முடி உலர்த்தக்கூடாது.
பகைவன், கெட்டவன், கள்வன், பிறர் மனைவி இவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது.
பிறர் தரித்த உடைகள், மாலை, செருப்பு, படுக்கைகள் இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.
பிணப்புகை, தீபநிழல், இளவெயில் போன்றவை நம் மேல்படக்கூடாது.
பசு மாட்டை அடிப்பது, காலால் உதைப்பது, தீனி போடாமல் இருப்பது பெரும்பாவம்.
தூங்குபவரை தீடீரென்று எழுப்பக்கூடாது. அவர்களை உற்று பார்க்கக்கூடாது.
அண்ணன் – தம்பி; அக்காள் – தங்கை; ஆசிரியர் – மாணவர்; கணவர் – மனைவி; குழந்தை- தாய்; பசு – கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
யாரும் கேட்காமல் நாமாக யாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாது.
சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் வலது கையினால் மட்டுமே நீர் அருந்த வேண்டும்.
சாப்பிடும் போது முதலில் இனிப்பு,உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு இறுதியாகவே நீர் அருந்த வேண்டும்.
நெருப்பை வாயால் ஊதக்கூடாது.
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
பசு, தேர், நெய்குடம், அரசமரம் ,வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் குறிக்கிட்டால் வலதுப்புறம் சுற்றி செல்ல வேண்டும்.
அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
கன்றுக்குட்டியின் கயிரைத் தாண்டக்கூடாது. மழையில் ஓடக்கூடாது. தண்ணீரில் முகம் பார்க்கக்கூடாது.
இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால் சூரிய பகவானை தியானம் செய்து விளக்கேற்றி சாப்பிட வேண்டும்.
சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலை போடக்கூடாது. வெற்றிலையின் பின்புறமே சுண்ணாம்பு தடவ வேண்டும்