காலையில் திசை பார்த்து எழுந்திருங்கள்!
கிழக்கு முகம்பார்த்தால் ஆயுள் விருத்தி.
தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம்.
தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகும்.
தென்மேற்கு மூலை பார்த்தால், பாவங்கள் சேரும்.
மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.
வடமேற்கை பார்த்தால், புஷ்டியுண்டாகும்.
வடகிழக்கு மூலையை பார்த்தால், உடலிலும் – உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும்.
இவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் இன்னல்கள் மறையும், இறைவனின் ஆசியால் நன்மைகள் நம்மை தேடி வரும்
வடக்கில் தலைவைத்து படுக்கக்கூடாது: பயனுள்ள அறிவுரைகள்
சாஸ்திரங்களில் நாம் என்ன செய்தால் செல்வமும் கல்வியின் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நாம் செய்யக்கூடாதவைகளும் அறிவுரையாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் சில
குரு,ஜோதிடர்,கோவில்,சகோதரி,வைத்தியர் இவர்களை பார்க்க செல்லும்போது வெறும் கையுடன் செல்லக்கூடாது.
தலையையோ உடலையோ இரு கையாலும் சொறியக்கூடாது. வலது கையினால் மட்டுமே சொறிய வேண்டும்.
இரு கையாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது. வலது கையினால் மட்டுமே தேய்க்க வேண்டும்.
வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது. ஒரு காலை மற்றொரு காலால் தேய்த்து கழுவக்கூடாது.
பேசும் போது துரும்பை கிள்ளி போடக்கூடாது. ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.
தலைவாசலுக்கு நேரே தரையிலோ, கட்டில் போட்டோ படுக்கக்கூடாது. வீட்டிற்குள் வரும் போது தலைவாசல் வழியாக தான் வரவேண்டும்.
வடக்கிலும், கோணத்திசைக்களிலும் தலை வைத்து படுக்கக்கூடாது. நடக்கும் போது முடி உலர்த்தக்கூடாது.
பகைவன், கெட்டவன், கள்வன், பிறர் மனைவி இவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது.
பிறர் தரித்த உடைகள், மாலை, செருப்பு, படுக்கைகள் இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.
பிணப்புகை, தீபநிழல், இளவெயில் போன்றவை நம் மேல்படக்கூடாது.
பசு மாட்டை அடிப்பது, காலால் உதைப்பது, தீனி போடாமல் இருப்பது பெரும்பாவம்.
தூங்குபவரை தீடீரென்று எழுப்பக்கூடாது. அவர்களை உற்று பார்க்கக்கூடாது.
அண்ணன் – தம்பி; அக்காள் – தங்கை; ஆசிரியர் – மாணவர்; கணவர் – மனைவி; குழந்தை- தாய்; பசு – கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
யாரும் கேட்காமல் நாமாக யாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாது.
சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் வலது கையினால் மட்டுமே நீர் அருந்த வேண்டும்.
சாப்பிடும் போது முதலில் இனிப்பு,உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு இறுதியாகவே நீர் அருந்த வேண்டும்.
நெருப்பை வாயால் ஊதக்கூடாது.
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
பசு, தேர், நெய்குடம், அரசமரம் ,வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் குறிக்கிட்டால் வலதுப்புறம் சுற்றி செல்ல வேண்டும்.
அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
கன்றுக்குட்டியின் கயிரைத் தாண்டக்கூடாது. மழையில் ஓடக்கூடாது. தண்ணீரில் முகம் பார்க்கக்கூடாது.
இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால் சூரிய பகவானை தியானம் செய்து விளக்கேற்றி சாப்பிட வேண்டும்.
சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலை போடக்கூடாது. வெற்றிலையின் பின்புறமே சுண்ணாம்பு தடவ வேண்டும்
No comments:
Post a Comment