Monday, 16 February 2015

கேட்ட வரம் கொடுக்கும் நொச்சியம் முனீஸ்வரர்

கேட்ட வரம் கொடுக்கும் நொச்சியம் முனீஸ்வரர்

கேட்ட வரம் கொடுக்கும் நொச்சியம்  முனீஸ்வரர்  கோவில் .

திருச்சியில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் நொச்சியம் ( மணச்சநல்லூர் வளைவு திரும்பும் இடம் ) அதாவது சுமார் 10 கி.மி தூரத்தில் உள்ளது இந்த முனீஸ்வரன் கோவில்.

இது கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தம்மான தோப்பில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்து உள்ளது ,

இந்த கோவிலில் முனீஸ்வரன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது 
இதன் உருவம் சுமார் ஒரு 6 முதல 7 அடி வரை இருக்கும் இங்கு உள்ள முனீஸ்வரன் உருவம் மிகவும் பிரம்மாண்டமாக அமர்ந்த நிலையில் தன்னை தேடி வரும் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறார் .

இவர் மக்களின் கேட்டவரம் கொடுக்கும் தெய்வமாக இருக்கிறார் . 

இங்கு வந்து முனீஸ்வரருக்கு விளக்கு ஏற்றி தேங்காய், பழம், எலுமிச்சை பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் மக்களின் துயரம் எல்லாம் பனி கண்ட பகலவன் போல விலகி விடும்.

பக்த்தர்களின் வேண்டுகோள் நிறைவேறி விட்டால் அங்கு கிடா வெட்டி அங்கு வரும் மக்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.

இந்த கோவிலில் பிரதான தெய்வமாக முனீஸ்வரன், கருப்பு, மாசி பெரியண்ணன், விநாயகர், ஆஞ்சநேயர், அங்காள பரமேஸ்வரி , பாம்பு புற்று, உள்ளது.

இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிரு போன்ற நாட்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும் அந்த நாட்களில் அன்னதானம் நடைபெறும்.

இங்கு சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் அனைவரின் முகத்திலும் தீர்த்தம் அடித்து விடுவார்கள் அப்படி செய்வதால் அவர்களுக்கு பிடித்த பீடைகள் மற்றும் செவினைகள் எல்லாம் அவர்களை விட்டு சென்று விடும் என்பது உறுதி.

அதனால் பக்தர்கள் அனைவரும் திரு முனீஸ்வரர் அருள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுகிறோம்.

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்

கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் ( ரிண விமோசன லிங்கேஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார்.

"பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே."
திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன்.

தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது.

இச்சந்நதியின் முன் நின்று கூறை உவந்தளித்த கோவேயென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

நிரந்தர வேலை வாய்ப்பு கிடை சிறந்த படிப்பு

மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு கிடை

சிறந்த படிப்பு .அருள் வழங்கும் துடையூர் விஷமங்களனாதர் கோவில்

துடையூர் விஷமங்களனாதர் கோவில் திருச்சி டு மணச்சநல்லூர் ரோடில் நொச்சியம் இல் இருந்து சேலம் செல்லும் ரோடில் அதாவது 5 கி.மி தூரத்தில் உள்ளது இந்த ஆலயம் இது ஒரு சிவன் கோவில் இந்த கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது இந்த கோவிலில் உள்ள சிவன் மிகவும் சக்தி உள்ளவர் இவர் முனிவர்களாலும் தேவர்களாலும் வணங்க்கபட்டவர், இந்த கோவிலில் 3 மணி நேரம் எரியும் படி விளக்கு போட்டால் நினைத்த காரியம் கைகூடும், இந்த கோவில் ஒரு ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது, இங்கு சிவன் விஷமங்களநாதர் என்ற பெயரில் இருக்கிறார் இங்கு வீணை சரஸ்வதியும் வீணை குருபகவானும் இருகிறார்கள் அவர்களுக்கு தேன் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வரும், முதலில் சிவனை கும்பிட்டுவிட்டு பின்பு தாயாரை வணங்கிவிட்டு அப்புறம் சரஸ்வதி மற்றும் குருபகவான் வணங்கி பின்பு சிவன் கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி பின்பு வெளியில் உள்ள பாம்பு புற்றுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் நிரந்தர வேலை கிடைக்கும் , கணவன் மனைவி உறவு மிகவும் சிறந்த முறையில் இருக்கும், பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர் , குடும்பத்தில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர், செல்வம் பெருகும், வேலை சம்பந்தமான குறைகள் நீங்கு

திருநள்ளாறு சனீஸ்வரன் வணங்கும் முறை

திருநள்ளாறு சனீஸ்வரன் வணங்கும் முறை

திருநள்ளாறு சனீஸ்வரன் வணங்கும் முறை 

திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வணங்க வேண்டும் என்று நினைபவர்கள் வெள்ளி கிழமை இரவு அந்த கோவில் எல்லையில் தங்க வேண்டும் பின்பு காலையில் எழுந்து நளதீர்த்தம் சென்று தாங்கள் விரும்பும் பழைய ஆடைகளை அணிந்து கொண்டு குளத்தில் அப்படியே இறங்க வேண்டும் அப்போது தலையில் நல்லெண்ணெய் தடவி தலையின் மேல் 1 ரூபாய் காசு வைத்து 3 முறை முழுகி காசை தண்ணிரில் விட வேண்டும் அப்புறம் சூரிய பகவனை பார்த்து மனம் உருக நம் மனதில் உள்ள குறைகள் எல்லாம் சொல்லி கும்பிட வேண்டும் பின்பு தண்ணிரில் இருக்கும் போதே நம் ஆடைகளை எல்லாம் எடுத்து தண்ணீரில் விட்டு விட வேண்டும் பின்பு வேறு டிரஸ் மாற்றி அருகில் இருக்கும் விநாயகர் கோவில் சென்று ஒரு தேங்காய் வாங்கி நம் தலையை 3 சுற்று சுற்றி சிதறுகாய் உடைக்க வேண்டும் பின்பு  விநாயகரை  கும்பிட்டு நேராக சனீச்வரன் கோவில் சென்று குவளை மலர் உள்ள மாலை மற்றும் அர்ச்சனை தட்டு வாங்கி பின்பு நல்லெண்ணெய் விளக்கு வாங்கி அங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பின்பு முதலில் கோவில் நுழைந்தவுடன் சிவனை வணங்கி பின்பு தாயாரை வணங்கி பின்பு பைரவர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி அப்புறம் தான் சனீச்வரன் வணங்க செல்ல வேண்டும் குறிப்பு : சனீச்வரன் வணங்க போகும் முன்பு அதாவது  நாம் லைனில் அர்ச்சனை கொடுக்கும் முன்பு எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் நின்று சனீஸ்வரனை மனம் உருக நம் மனதில் உள்ள எந்த கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எல்லாம் கண்ணீர் மல்க சொல்ல வேண்டும் அது முடிந்த உடன் சனீஸ்வரனுக்கு உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் அர்ச்சனை செய்த பிறகு எக்காரணம் கொண்டும்  சனீஸ்வரனை திரும்ப  பார்க்க கூடாது பிறகு அங்கு சில நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு திரும்பி பார்க்காமல் வர வேண்டும் மேலும் அர்ச்சனை செய்த தேங்காய் பழம் மற்றும் பூ விபூதி கொண்டுவர கூடாது அங்கு வைத்து வந்து விட வேண்டும் பின்பு உங்களால் முடிந்த அளவு அதாவது உங்கள் வசதிக்கு ஏற்ப 2 அல்லது 8 பேருக்கு தயிர் சாதம் வாங்கி அன்னதானம் செய்து வரவும் அன்னதானம் செய்வது உடல் ஊனம் உள்ளவராக இருந்தால் மிகவும் நல்லது, பின்பு கோவிலை விட்டு கிளம்பினால் வேறு எங்கும் செல்லாமல் உங்கள் வீடு வந்து சேர வேண்டும் மற்ற உறவினர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது .

மேற்சொன்னது போல நீங்கள் செய்தால் உங்கள் எந்த பிரச்சனை என்றாலும் கண்டிப்பாக மிக விரைவில் அது தீரும் இது உறுதி .

சனீச்வரன் மிகவும் சிறந்த நீதிமான், மிகவும் நல்லவர், ஒருவர் பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப தான் நீதி வழங்குவார்.

அதற்காக சனீஸ்வரனை நாம் பார்த்தால் தண்டனை வராது என்ற அர்த்தம் இல்லை நம் தண்டனையின் வேகம் குறையும். அதாவது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல இருக்கும்.

1. குடும்ப பிரச்சனைகள் 
2. சொத்து 
3. தொழில்.
4. கணவன் மனைவி பிரச்னை 
5. உடல் நலம் 
6. முன்செய்த வினைகள் .
7. நீண்ட ஆயுள்.
8. விபத்து 
9. சகல சம்பத்துகள் கிடைக்க

உங்கள் தலையெழுத்தை மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

உங்கள் தலையெழுத்தை மற்றும் சக்தி படைத்த திருப்பட்டூர் கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருப்பட்டூர் கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபட்டால் உங்கள் பிரச்சனை எல்லாம் கண்டிப்பாக குறையும் ஏன் என்றால் அங்கு சிவபெருமான் பிரம்மனுக்கு வரம் கொடுத்த இடம் எதற்கு வரம் கொடுத்தார் சிவபெருமான் என்றால் அதாவது மனிதன் பிறக்கும் போது அவனுக்கு எப்படி வாழ்க்கை இருக்க வேண்டும் என்று பிரம்மன் நம்முடைய தலையெழுத்தை எழுதி விடுகிறார் அதன் பிறகு அவனுக்கு வரும் துன்பம் எதுவாக இருந்தாலும் அதை போக்க திருச்சி அருகே உள்ள சிருகனூர் அருகில் இருக்கும் திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் சென்று அங்கு நம்முடைய ஜாதகம் வைத்து அர்ச்சனை பிரம்மனுக்கு செய்து வந்தால் துன்பம் எல்லாம் கண்டிப்பாக குறையும் .

வழிபடும் முறை .

முதலில் திருப்பட்டூர் அதாவது திருச்சி டு சென்னை பைபாஸ் ரோடில் சமயபுரம் கோவில் இருந்து சுமார் 15 கி . மீ . சென்றால் இடதுபுறத்தில் 5 கி மி. சென்றால் திருப்பட்டூர் ஊர் வரும் அங்கு தான் இந்த கோவில் அமைந்துள்ளது .
முதலில் சிவன் கோவிலில் இருந்து 1.5 கி.மி தூரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சென்று அங்கு உள்ள வியக்ரபாரதர் ஜீவா சமாதியை வணங்கி சிறிது தியானம் செய்து பின்பு சிவன் மற்றும் பார்வதியை தரிசனம் செய்து பின்பு அங்கு இருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவில் வர வேண்டும் .

அதன் பின்பு சிவன் கோவில் சென்று முதலில் சிவனை மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும் அதன் பிறகு பிரம்மனுக்கு அர்ச்சனை தட்டு வாங்கி அதன் உடன் உங்களது ஜாதகத்தையும் சேர்த்து அய்யர் இடம் கொடுத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து தரும் படி கொடுக்கவும் அவர் உங்கள் ஜாதகத்தை பிரம்மன் மடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு உங்களிடம் கொடுப்பார் ( அர்ச்சனை செய்யும் போது உங்கள் குறைகள் எல்லாம் சொல்லி பிரம்மனை மனதார வேண்டி கொள்ளுங்கள் பின்பு அங்கு இருக்கும் பதஞ்சலி முனிவர் உள்ள ஜீவ சமாதி சென்று மனம் உருக பிரார்த்தனை செய்து கொஞ்ச நேரம் தியானம் செய்து பின்பு அங்கு உள்ள அம்பாள் வழிபட்டு பின்பு அங்கு உள்ள சிவலிங்கம் எல்லாவற்றையும் கும்பிட்டு வரவும் .

அப்புறம் உங்கள் குறைகள் எல்லாம் கண்டிப்பாக கதிரவன் கண்ட பனி போல் கொஞ்சம் கொஞ்சம்மாக குறையும் அதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம்.

குறிப்பு : இதை வியாழன் அன்று தான செய்ய வேண்டும் 

எந்த பிரச்சனை என்றாலும் அதாவது 
1. தொழிலில் பிரச்சனை 
2. கடன்.
3. திருமணம் விரைவில் நிறைவேற .
4. புத்திர பாக்கியம் உண்டாக .
5. கணவன் மனைவி பிரிவினைகள் நீங்கி ஒன்று சேர .
6. நல்ல வேலை கிடைக்க மற்றும் உத்தியோக உயர்வு.
7. வீடு மனை கிடைக்க.
8. நன்றாக படிக்க.
9. சகல செல்வங்களும் சேர .

அருள்மிகு திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபடுங்கள் உங்கள் பிரச்சனை எல்லாம் கண்டிப்பாக தீரும் .