கேட்ட வரம் கொடுக்கும் நொச்சியம் முனீஸ்வரர்
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் நொச்சியம் ( மணச்சநல்லூர் வளைவு திரும்பும் இடம் ) அதாவது சுமார் 10 கி.மி தூரத்தில் உள்ளது இந்த முனீஸ்வரன் கோவில்.
இது கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தம்மான தோப்பில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்து உள்ளது ,
இந்த கோவிலில் முனீஸ்வரன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது
இதன் உருவம் சுமார் ஒரு 6 முதல 7 அடி வரை இருக்கும் இங்கு உள்ள முனீஸ்வரன் உருவம் மிகவும் பிரம்மாண்டமாக அமர்ந்த நிலையில் தன்னை தேடி வரும் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறார் .
இவர் மக்களின் கேட்டவரம் கொடுக்கும் தெய்வமாக இருக்கிறார் .
இங்கு வந்து முனீஸ்வரருக்கு விளக்கு ஏற்றி தேங்காய், பழம், எலுமிச்சை பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் மக்களின் துயரம் எல்லாம் பனி கண்ட பகலவன் போல விலகி விடும்.
பக்த்தர்களின் வேண்டுகோள் நிறைவேறி விட்டால் அங்கு கிடா வெட்டி அங்கு வரும் மக்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.
இந்த கோவிலில் பிரதான தெய்வமாக முனீஸ்வரன், கருப்பு, மாசி பெரியண்ணன், விநாயகர், ஆஞ்சநேயர், அங்காள பரமேஸ்வரி , பாம்பு புற்று, உள்ளது.
இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிரு போன்ற நாட்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும் அந்த நாட்களில் அன்னதானம் நடைபெறும்.
இங்கு சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் அனைவரின் முகத்திலும் தீர்த்தம் அடித்து விடுவார்கள் அப்படி செய்வதால் அவர்களுக்கு பிடித்த பீடைகள் மற்றும் செவினைகள் எல்லாம் அவர்களை விட்டு சென்று விடும் என்பது உறுதி.
அதனால் பக்தர்கள் அனைவரும் திரு முனீஸ்வரர் அருள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment