உங்கள் தலையெழுத்தை மற்றும் சக்தி படைத்த திருப்பட்டூர் கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
வழிபடும் முறை .
முதலில் திருப்பட்டூர் அதாவது திருச்சி டு சென்னை பைபாஸ் ரோடில் சமயபுரம் கோவில் இருந்து சுமார் 15 கி . மீ . சென்றால் இடதுபுறத்தில் 5 கி மி. சென்றால் திருப்பட்டூர் ஊர் வரும் அங்கு தான் இந்த கோவில் அமைந்துள்ளது .
முதலில் சிவன் கோவிலில் இருந்து 1.5 கி.மி தூரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சென்று அங்கு உள்ள வியக்ரபாரதர் ஜீவா சமாதியை வணங்கி சிறிது தியானம் செய்து பின்பு சிவன் மற்றும் பார்வதியை தரிசனம் செய்து பின்பு அங்கு இருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவில் வர வேண்டும் .
அதன் பின்பு சிவன் கோவில் சென்று முதலில் சிவனை மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும் அதன் பிறகு பிரம்மனுக்கு அர்ச்சனை தட்டு வாங்கி அதன் உடன் உங்களது ஜாதகத்தையும் சேர்த்து அய்யர் இடம் கொடுத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து தரும் படி கொடுக்கவும் அவர் உங்கள் ஜாதகத்தை பிரம்மன் மடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு உங்களிடம் கொடுப்பார் ( அர்ச்சனை செய்யும் போது உங்கள் குறைகள் எல்லாம் சொல்லி பிரம்மனை மனதார வேண்டி கொள்ளுங்கள் பின்பு அங்கு இருக்கும் பதஞ்சலி முனிவர் உள்ள ஜீவ சமாதி சென்று மனம் உருக பிரார்த்தனை செய்து கொஞ்ச நேரம் தியானம் செய்து பின்பு அங்கு உள்ள அம்பாள் வழிபட்டு பின்பு அங்கு உள்ள சிவலிங்கம் எல்லாவற்றையும் கும்பிட்டு வரவும் .
அப்புறம் உங்கள் குறைகள் எல்லாம் கண்டிப்பாக கதிரவன் கண்ட பனி போல் கொஞ்சம் கொஞ்சம்மாக குறையும் அதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம்.
குறிப்பு : இதை வியாழன் அன்று தான செய்ய வேண்டும்
எந்த பிரச்சனை என்றாலும் அதாவது
1. தொழிலில் பிரச்சனை
2. கடன்.
3. திருமணம் விரைவில் நிறைவேற .
4. புத்திர பாக்கியம் உண்டாக .
5. கணவன் மனைவி பிரிவினைகள் நீங்கி ஒன்று சேர .
6. நல்ல வேலை கிடைக்க மற்றும் உத்தியோக உயர்வு.
7. வீடு மனை கிடைக்க.
8. நன்றாக படிக்க.
9. சகல செல்வங்களும் சேர .
அருள்மிகு திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபடுங்கள் உங்கள் பிரச்சனை எல்லாம் கண்டிப்பாக தீரும் .
No comments:
Post a Comment