திருநள்ளாறு சனீஸ்வரன் வணங்கும் முறை
திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வணங்க வேண்டும் என்று நினைபவர்கள் வெள்ளி கிழமை இரவு அந்த கோவில் எல்லையில் தங்க வேண்டும் பின்பு காலையில் எழுந்து நளதீர்த்தம் சென்று தாங்கள் விரும்பும் பழைய ஆடைகளை அணிந்து கொண்டு குளத்தில் அப்படியே இறங்க வேண்டும் அப்போது தலையில் நல்லெண்ணெய் தடவி தலையின் மேல் 1 ரூபாய் காசு வைத்து 3 முறை முழுகி காசை தண்ணிரில் விட வேண்டும் அப்புறம் சூரிய பகவனை பார்த்து மனம் உருக நம் மனதில் உள்ள குறைகள் எல்லாம் சொல்லி கும்பிட வேண்டும் பின்பு தண்ணிரில் இருக்கும் போதே நம் ஆடைகளை எல்லாம் எடுத்து தண்ணீரில் விட்டு விட வேண்டும் பின்பு வேறு டிரஸ் மாற்றி அருகில் இருக்கும் விநாயகர் கோவில் சென்று ஒரு தேங்காய் வாங்கி நம் தலையை 3 சுற்று சுற்றி சிதறுகாய் உடைக்க வேண்டும் பின்பு விநாயகரை கும்பிட்டு நேராக சனீச்வரன் கோவில் சென்று குவளை மலர் உள்ள மாலை மற்றும் அர்ச்சனை தட்டு வாங்கி பின்பு நல்லெண்ணெய் விளக்கு வாங்கி அங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பின்பு முதலில் கோவில் நுழைந்தவுடன் சிவனை வணங்கி பின்பு தாயாரை வணங்கி பின்பு பைரவர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி அப்புறம் தான் சனீச்வரன் வணங்க செல்ல வேண்டும் குறிப்பு : சனீச்வரன் வணங்க போகும் முன்பு அதாவது நாம் லைனில் அர்ச்சனை கொடுக்கும் முன்பு எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் நின்று சனீஸ்வரனை மனம் உருக நம் மனதில் உள்ள எந்த கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எல்லாம் கண்ணீர் மல்க சொல்ல வேண்டும் அது முடிந்த உடன் சனீஸ்வரனுக்கு உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் அர்ச்சனை செய்த பிறகு எக்காரணம் கொண்டும் சனீஸ்வரனை திரும்ப பார்க்க கூடாது பிறகு அங்கு சில நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு திரும்பி பார்க்காமல் வர வேண்டும் மேலும் அர்ச்சனை செய்த தேங்காய் பழம் மற்றும் பூ விபூதி கொண்டுவர கூடாது அங்கு வைத்து வந்து விட வேண்டும் பின்பு உங்களால் முடிந்த அளவு அதாவது உங்கள் வசதிக்கு ஏற்ப 2 அல்லது 8 பேருக்கு தயிர் சாதம் வாங்கி அன்னதானம் செய்து வரவும் அன்னதானம் செய்வது உடல் ஊனம் உள்ளவராக இருந்தால் மிகவும் நல்லது, பின்பு கோவிலை விட்டு கிளம்பினால் வேறு எங்கும் செல்லாமல் உங்கள் வீடு வந்து சேர வேண்டும் மற்ற உறவினர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது .
மேற்சொன்னது போல நீங்கள் செய்தால் உங்கள் எந்த பிரச்சனை என்றாலும் கண்டிப்பாக மிக விரைவில் அது தீரும் இது உறுதி .
சனீச்வரன் மிகவும் சிறந்த நீதிமான், மிகவும் நல்லவர், ஒருவர் பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப தான் நீதி வழங்குவார்.
அதற்காக சனீஸ்வரனை நாம் பார்த்தால் தண்டனை வராது என்ற அர்த்தம் இல்லை நம் தண்டனையின் வேகம் குறையும். அதாவது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல இருக்கும்.
1. குடும்ப பிரச்சனைகள்
2. சொத்து
3. தொழில்.
4. கணவன் மனைவி பிரச்னை
5. உடல் நலம்
6. முன்செய்த வினைகள் .
7. நீண்ட ஆயுள்.
8. விபத்து
9. சகல சம்பத்துகள் கிடைக்க
No comments:
Post a Comment